5 3
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மீது மர்ம ட்ரோன் கண்காணிப்பு – ரஷ்யா மீது சந்தேகம்

Share

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மர்ம ட்ரோன்கள் மூலம் ரஷ்யா கண்காணிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஜேர்மனியின் வடக்கு மாநிலமான Schleswig-Holstein-ல் உள்ள முக்கிய மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் கண்காணிப்பு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் கடந்த வாரம் Rendsburg-Eckernforde மாவட்டம் மற்றும் கீல் (Kiel) நகரத்தில் நிகழ்ந்துள்ளன.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் சபீன் சுட்டர்லின்-வாக் (Sabine Sütterlin-Waack), பல வகைகள் மற்றும் அளவுகளில் ட்ரோன்கள் பறந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜேர்மனியின் Der Spiegel பத்திரிக்கையின் தகவலின்படி, செப்டம்பர் 25-ஆமா திகதி கீல் நகரில் உள்ள மின் நிலையம், பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் போர்க்கப்பல் தொழிற்சாலை மீது ட்ரோன்கள் பிறந்துள்ளன.

குறிப்பாக parent drone மற்றும் combined drone system போன்ற தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள் மருத்துவமனை மீது பறந்ததாக உள்நாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், Mecklenburg-Western Pomerania மாநிலத்தில் உள்ள இரன்டுவ தளங்கள் மற்றும் கடற்படை கட்டுப்பாட்டு மையங்களிலும் ட்ரோன்கள் பறந்துள்ளன.

இந்த ட்ரோன் நடவடிக்கைகள் ரஷ்யாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...