4 3
உலகம்செய்திகள்

மாலை நேரம் மட்டும் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால்… சுவாரஸ்ய சுவிஸ் ஆய்வு

Share

கல்வி பயிலும் மாணவ மாணவியர், மாலை நேரம் மட்டும் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தாலே, கல்வியில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடையிலுள்ள 300 மாணவ மாணவியர் ஆய்வொன்றிற்குட்படுத்தப்பட்டார்கள்.

சுவிட்சர்லாந்தில், பல வீடுகளில் பிள்ளைகள் மாலை நேரத்திலும் படுக்கையறையிலும் மொபைல் பயன்படுத்த தடைவிதிக்கும் பெற்றோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆக, பிள்ளைகளின் மொபைல் பயன்பாடு தொடர்பில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

பிள்ளைகளின் பதிலில் ஒரு முக்கிய விடயம் தெரியவந்தது. ஆம், எந்தெந்த பிள்ளைகளின் வீடுகளில் மாலை மற்றும் படுக்கையறையில் மொபைல் பயன்படுத்த பெற்றோர் தடை விதித்துள்ளார்களோ, அந்தப் பிள்ளைகள் இரவில் நீண்ட நேரம் தூங்குகிறார்கள். சுமார் 40 நிமிட கூடுதல் ஓய்வு அவர்களுக்குக் கிடைக்கிறது.

அதனால், அந்தப் பிள்ளைகள், களைப்பில்லாமல் வகுப்பில் நன்கு கவனம் செலுத்துவதாகவும், நன்கு படிப்பதாகவும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆக, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால், அதாவது, பிள்ளைகள் கட்டுப்பாடாக வளர்க்கப்படுதால், அது பிள்ளைகளின் கல்வியைப் பொருத்தவரையிலும் நன்மையையே செய்துள்ளது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...