24 668696c390186fffffffffffff
உலகம்செய்திகள்

இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல்

Share

இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல்

இஸ்ரேலின் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா போராளிக் குழு ஏவி சரமாரி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா போராளிக் குழு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் ட்ரோன் தாக்குதலை பயன்படுத்தி 10 இஸ்ரேலிய ராணுவ தளங்களை அழித்து இருப்பதாகவும் ஹிஸ்புல்லா போராளிக் குழு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலானது ஹிஸ்புல்லா போராளிக் குழுவின் மூத்த தளபதிகளில் ஒருவரை இஸ்ரேல் கொலை செய்ததை தொடர்ந்து இது பதிலடியாக நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் சந்தேகத்திற்கு இடமான வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்த தகவலில், ஏவுகணை தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கு இடையே கடந்த சில தினங்களாக எல்லைப் பிரச்சினை நிலவி வருவது கவனிக்கத்தக்கது.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...