235637092 10227463296751273 6696546886395618388 n
உலகம்செய்திகள்

கொல்களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Share

கொல்களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இறைச்சிக்கு வெட்டுவதற்காக கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்ட காளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது.

பிரான்ஸின் மத்திய பிராந்தியமாகிய Auvergne-Rhône-Alpes இல் உள்ள Feurs (Loire) என்ற இடத்தில் கடந்தவாரம் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

உயிரைக் காப்பதற்காக நீண்ட தூரம் ஓடி நகர மத்தியில் ஒளிந்துகொண்ட அந்தக் கன்றை தீயணைப்புப் பிரிவினர் மயக்க மருந்துடன் கூடிய ஊசி அம்பு(hypodermic arrow) எய்து பிடித்தனர். கால்நடை மருத்துவர் ஒருவரது கண்காணிப்புடன் அது ஆழ்ந்த உறக்கத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டது.

மாட்டுக்கு உரிமை கோரி அதனை மீளப்பெற்று கொல்களத்துக்குக் கொண்டுசெல்ல அதன் உரிமையாளர் முயன்றார். ஆனால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட மிருகங்களை 35 தினங்களுக்குப் பின்னரே இறைச்சிக்காகக் கொல்ல முடியும் என்பது சுகாதார விதி. அந்த விதி கன்றின் தலைவிதியை மாற்றியது.

காளைக் கன்று தப்பித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனைக் காப்பாற்றுவதற்கான கோரிக்கை அடங்கிய இணைய மகஜர் ஒன்று திறக்கப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்குள் காளைக் கன்றுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் சேர்ந்தன. கன்றுக்கான கட்டணத்தை உரிமையாளருக்கு வழங்கி அதனைப் பாதுகாப்பதற்கு ஆதரவாக நிதி குவிந்தது.

“கன்று தனது உயிரைக் காத்துக்கொள்ளும் உரிமைக்காகக் காட்டிய உறுதியையும் துணிச்சலையும் கருத்தில் கொண்டு ஒர் குறியீட்டு அடையாளமாகவேனும் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது” – என்று விலங்குரிமை பேணுவோர் இணையத்தில் தமது ஆதரவைத் தெரிவித்தனர். கன்றை மீண்டும் கொல்களத்துக்கு அனுப்பவேண்டாம் என்று குரல்கள் எழுந்தன.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் நொடிக்குள் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. மாட்டுக் கன்றின் செய்தியும் அவ்வாறே வைரலாகப் பரவி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியிருக்கிறது.

Brigitte Bardot Foundation என்ற நிறுவகம் இது போன்று கொல்களங்களில் இருந்து மீட்கப்படுகின்ற ஆயிரக்கணக்கான விலங்குகளைப் பேணிப் பராமரித்து வருகிறது. தப்பியோடிய காளைக் கன்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் அது ஏற்றுக்கொண்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...