arrest 700x375 1
செய்திகள்இலங்கை

முள்ளிவாய்க்காலை சேர்ந்த பெண் கைது!

Share

முள்ளிவாய்க்காலை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கி வந்துள்ளபெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்ப முயன்றுள்ளார். இந்த வேளையிலேயே குறித்த பெண் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் .

முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி என்ற 18 வயது இளம் பெண்ணே தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.

இறுதிப் போரின் பின்னர் இலங்கையில் இருந்து கஸ்தூரி தமிழகம் வந்து அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்துள்ளார். அங்கு ஒருவருடன் காதல் வசப்பட்டுள்ளார். மீண்டும் இலங்கை திரும்பிய அவர், காதலனைச் சந்திப்பதற்காக 2018ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னைக்குச் சென்றுள்ளார் என்று கூறப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட பெண் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...