un 1
செய்திகள்அரசியல்இலங்கைஉலகம்

உக்ரைன், ரஷ்யா போரால் ஜெனிவாவில் இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பா?

Share

“போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் மூண்டது. அது தொடர்பிலேயே அனைவரினதும் கவனம் திரும்பியது. ஐ.நா. மற்றும் அதன் கிளை அமைப்புகளின் பார்வையும் திரும்பின. அவ்வாறு கவனம் செலுத்தப்பட வேண்டியது மேற்படி அமைப்புகளின் கடப்பாடும்கூட.

எனவே, இப்படியான நிலையில் இலங்கைத் தமிழர் விவகாரம், மனித உரிமைகள் பேரவையில் கவனிப்பாரற்று போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அந்த அச்சத்தை போக்கும் விதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் மிகவும் கடுமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கை குறித்து மார்ச் 03 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது உறுப்பு நாடுகளின் நிலைப்பாடுகளையும் அறியலாம்.

அதேவேளை, நாம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள். போரின் வலி நன்கு புரியும். எனவே, போரை நிறுத்துமாறு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார் எம்.ஏ. சுமந்திரன்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...