Udaya Gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

மௌனம் காக்கமாட்டோம்! – உதய கம்மன்பில எச்சரிக்கை

Share

மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

யுகதனவி ஒப்பந்தம் மற்றும் திருகோணமலை உடன்படிக்கை ஆகியவற்றுக்கு எமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம் .இது விடயத்தில் எமது நிலைப்பாடு மாறாது. பின்வாங்கவும் மாட்டோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் பேசுவோம்.

20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும்போது அமைச்சரவையில் மௌனம் காத்து, வாத விவாதங்களில் பங்கேற்காமல் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டோம். அதற்காகவே தற்போது எமது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வருகின்றோம்.

அரசை சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.” – என்றார்.

#SriLanaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...