Udaya Gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

மௌனம் காக்கமாட்டோம்! – உதய கம்மன்பில எச்சரிக்கை

Share

மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

யுகதனவி ஒப்பந்தம் மற்றும் திருகோணமலை உடன்படிக்கை ஆகியவற்றுக்கு எமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம் .இது விடயத்தில் எமது நிலைப்பாடு மாறாது. பின்வாங்கவும் மாட்டோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் பேசுவோம்.

20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும்போது அமைச்சரவையில் மௌனம் காத்து, வாத விவாதங்களில் பங்கேற்காமல் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டோம். அதற்காகவே தற்போது எமது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வருகின்றோம்.

அரசை சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.” – என்றார்.

#SriLanaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...