செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

Share

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த இது குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், மின்சக்தித் துறையுடன் தொடர்புடைய அனைத்துப் பங்காளிகளுடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் போது ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அவர்களால் முன்வைக்கப்பட்ட நலன்புரி விவகாரங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, சாத்தியமான அனைத்து விடயங்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

மின்சாரத் துறையின் அபிவிருத்தி என்பது நாட்டின் தேசிய முன்னுரிமை மிக்க விடயமாகும்.

தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு இந்த மறுசீரமைப்பு இன்றியமையாதது என்பதால், இதற்கு ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என மின்சார சபை நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...