Udaya Gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

மௌனம் காக்கமாட்டோம்! – உதய கம்மன்பில எச்சரிக்கை

Share

மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

யுகதனவி ஒப்பந்தம் மற்றும் திருகோணமலை உடன்படிக்கை ஆகியவற்றுக்கு எமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம் .இது விடயத்தில் எமது நிலைப்பாடு மாறாது. பின்வாங்கவும் மாட்டோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் பேசுவோம்.

20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும்போது அமைச்சரவையில் மௌனம் காத்து, வாத விவாதங்களில் பங்கேற்காமல் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டோம். அதற்காகவே தற்போது எமது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வருகின்றோம்.

அரசை சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.” – என்றார்.

#SriLanaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...