mahi gott
செய்திகள்அரசியல்இலங்கை

அரசை பாதுகாக்கவே போராடுகின்றோம்! – பங்காளிக் கட்சிகள்

Share

” ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, அரசை பாதுகாக்கவே போராடுகின்றோம்.” – என்று அறிவித்தல் விடுத்துள்ளனர் அரச பங்காளிக்கட்சித் தலைவர்கள்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தனிவழி பயணத்துக்கு தயாராகி வருகின்றனர் எனவும் வெளியாகும் தகவல்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

” தேசிய வளங்களையும், நாட்டையும் பாதுகாக்கவே 69 லட்சம்பேர் எமது அணிக்கு வாக்களித்தனர். எனவே, மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக நாம் அரசுக்குள் இருந்துகொண்டு போராடுவோம்.

ஆட்சி மாற்றமோ, ஆட்சி கவிழ்ப்போ எமது நோக்கம் அல்ல. இந்த அரசை முன்னோக்கி அழைத்துச்சென்று, நாட்டை பாதுகாக்க வேண்டும். பிரச்சினைகள் உள்ளன. அவற்றை பேச்சுமூலம் தீர்க்கவே முற்படுகின்றோம்.”- என்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...