COVID - இன்று மட்டும் தொற்று - 4,427
செய்திகள்இலங்கை

சரியாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் அபாய நிலைமை ஏற்படும்!!

Share

இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னராக காணப்பட்ட கொவிட் அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை சரியாக முகாமைத்துவம் செய்யாது விட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதனை விட அதிக அபாய நிலைமை ஏற்படக் கூடும்.

இவ்வாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே எச்சரித்துள்ளார்.

நேற்றையதினம் (29) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் .

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 53 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு பாதுகாப்புப்பெற்றுள்ளனர்,

63.6 சதவீதமானோர் முதற்கட்ட தடுப்பூசியினைப் பெற்றுள்ளனர் , ஆனால் இது மாத்திரம் போதுமானதல்ல.

மீண்டும் ஒரு அபாயமான சூழ்நிலை ஏற்படாது இருக்க அடிப்படைச் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது தனிநபர் உரிமை என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இதில் சமூக உரிமையும் பொறுப்பும் உள்ளடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்தவொரு நாடும் எந்தவொரு தடுப்பூசியையும் தடை செய்யவில்லை. மாறாக குறித்த தடுப்பூசிகளினைப் பெற்று தமது நாட்டுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தில் சில சலுகைகளினை வழங்குகின்றன.

எனவே எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு தயங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

முன்னர் ஏற்பட்டதனைப் போன்ற அபாய நிலை மீண்டும் ஏற்படுமாக இருந்தால் அதனைக் கட்டுப்படுத்துவது இலகுவானதல்ல என மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...