Awas Gejolak Sosial 1200x798666 1 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை திறப்பது ஆபத்தானது! – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

Share

நாட்டில் 75 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பதானது அச்சுறுத்தலான விடயமாகும்.

நாட்டை திறந்து தடுப்பூசி ஏற்றலாம் என கருதுவது மோசமான வைரஸ் பரவல் நிலையை உருவாக்கும்.

இவ்வாறு சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுமையாக திறக்கப்படுவதால் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும். நாடு இன்னமும் சிவப்பு எச்சரிக்கையில் இருந்து விடுபடவில்லை.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலத்திலும் மக்கள் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை.

நாட்டில் தற்போது டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை. 75 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை மீளத் திறப்பது அச்சுறுத்தலான விடயமாகும்.

தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் நிறைவடையாது நாட்டை திறப்பது மீண்டும் வைரஸ் பரவலுக்கு இடமளித்து மோசமான தாக்கத்தை உருவாக்கும்.

கடந்த சில நாட்களாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் அச்சுறுத்தல் நிலையை நாம் கடக்கவில்லை. எச்சரிக்கை நிலையில் இருந்து நாம் இன்னமும் விடுபடவுமில்லை இல்லை என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...