COVID - இன்று மட்டும் தொற்று - 4,427
செய்திகள்இலங்கை

சரியாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் அபாய நிலைமை ஏற்படும்!!

Share

இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னராக காணப்பட்ட கொவிட் அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை சரியாக முகாமைத்துவம் செய்யாது விட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதனை விட அதிக அபாய நிலைமை ஏற்படக் கூடும்.

இவ்வாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே எச்சரித்துள்ளார்.

நேற்றையதினம் (29) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் .

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 53 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு பாதுகாப்புப்பெற்றுள்ளனர்,

63.6 சதவீதமானோர் முதற்கட்ட தடுப்பூசியினைப் பெற்றுள்ளனர் , ஆனால் இது மாத்திரம் போதுமானதல்ல.

மீண்டும் ஒரு அபாயமான சூழ்நிலை ஏற்படாது இருக்க அடிப்படைச் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது தனிநபர் உரிமை என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இதில் சமூக உரிமையும் பொறுப்பும் உள்ளடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்தவொரு நாடும் எந்தவொரு தடுப்பூசியையும் தடை செய்யவில்லை. மாறாக குறித்த தடுப்பூசிகளினைப் பெற்று தமது நாட்டுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தில் சில சலுகைகளினை வழங்குகின்றன.

எனவே எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு தயங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

முன்னர் ஏற்பட்டதனைப் போன்ற அபாய நிலை மீண்டும் ஏற்படுமாக இருந்தால் அதனைக் கட்டுப்படுத்துவது இலகுவானதல்ல என மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...