தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் - பந்துல குணவர்தன
செய்திகள்இலங்கை

களஞ்சிய உரிமையாளர்களே அரிசி விலையேற்றத்துக்கு காரணம்!!! – அமைச்சர் பந்துல

Share

மக்களின் நுகர்வுக்குத் தேவையான நெல்லை சந்தைக்கு விநியோகிக்காத காரணதால் மட்டுமே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகப்பெரிய நெற்களஞ்சிய உரிமையாளர்கள் நெல்லைப் பதுக்கியமையாலேயே அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனாலேயே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு சந்தைக்கு அரிசியை விநியோகிப்போம் என உறுதியளித்திருந்தனர். அவ்வாறு உறுதியளிக்கப்பட்ட போதிலும் வழங்கிய வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர்.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அனுபவமற்றவர்கள் அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டுக்குள் அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கே 623 பொருள்களுக்கு 100 வீத நிதி வைப்பை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே இவ் விடயம் தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – என்றுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
hemasiri pujitha 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான விசாரணை மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம்...

MediaFile 11 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்: உள்ளூர் முகவர் நிறுவன இயக்குநர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பிடித்து பாரிய சுற்றாடல் அழிவை ஏற்படுத்திய ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ (X-Press...

24 66a66df53bbf3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயிரிழை அமைப்பில் 23 கோடி ரூபா நிதி மோசடி? – முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

புலம்பெயர் உறவுகளால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட சுமார் 23 கோடி ரூபா நிதியில்...

Dithwa Death Count
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா புயல் கோரம்: பலி எண்ணிக்கை 649 ஆக உயர்வு! இன்னும் 173 பேரைக் காணவில்லை – அதிர்ச்சித் தகவல்கள்.

‘டித்வா’ (Ditwa) புயலினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தொடர்ந்தும் 173 பேர் காணாமல்...