தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் - பந்துல குணவர்தன
செய்திகள்இலங்கை

களஞ்சிய உரிமையாளர்களே அரிசி விலையேற்றத்துக்கு காரணம்!!! – அமைச்சர் பந்துல

Share

மக்களின் நுகர்வுக்குத் தேவையான நெல்லை சந்தைக்கு விநியோகிக்காத காரணதால் மட்டுமே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகப்பெரிய நெற்களஞ்சிய உரிமையாளர்கள் நெல்லைப் பதுக்கியமையாலேயே அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனாலேயே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு சந்தைக்கு அரிசியை விநியோகிப்போம் என உறுதியளித்திருந்தனர். அவ்வாறு உறுதியளிக்கப்பட்ட போதிலும் வழங்கிய வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர்.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அனுபவமற்றவர்கள் அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டுக்குள் அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கே 623 பொருள்களுக்கு 100 வீத நிதி வைப்பை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே இவ் விடயம் தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – என்றுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...