24 66a66df53bbf3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயிரிழை அமைப்பில் 23 கோடி ரூபா நிதி மோசடி? – முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

Share

புலம்பெயர் உறவுகளால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட சுமார் 23 கோடி ரூபா நிதியில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ‘உயிரிழை’ அமைப்பின் உறுப்பினர் சா.குகதாசன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.

2002 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் புலம்பெயர் மக்களால் வழங்கப்பட்ட 23 கோடிக்கும் மேற்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக, ஒரு வருடகால கணக்கறிக்கையில் 8 கோடியே 80 இலட்சம் ரூபா வரவு காட்டப்பட்டாலும், அது சரியான முறையில் பயனாளிகளுக்குச் சென்றடையவில்லை.

அமைப்பின் பெயரில் பெறப்பட்ட நிதியில், சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொருளாளராக இருந்தவரின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தரவுகளைப் பெற முயன்றபோது அமைப்பின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

அமைப்பில் இருந்த 250 பயனாளிகளில் 56 முன்னாள் போராளிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். தற்போதுள்ள 196 பேரில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையின்றி உயிருக்குப் போராடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் புண்கள் மற்றும் உடல்நிலை பாதிப்புகளை இணையத்தில் காட்டி, நிதி திரட்டி அதனை வியாபார நோக்கமாக நிர்வாகத்தினர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பராமரிப்பு விடுதியில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையைத் தவறாகக் காட்டி, உணவுத் திட்டங்கள் மூலம் பணம் மோசடி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து வவுனியா பிரதேச செயலாளரிடம் 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் சமர்ப்பிக்கப்பட்டும், உரிய பதில் கிடைக்கவில்லை என குகதாசன் தெரிவித்தார். மேலும், “வடக்கு – கிழக்கு பிரச்சினைகளுக்குத் தொடர்பில்லை” என பிரதேச செயலாளர் பதிலளித்ததாகவும், ஆனால் அவர் 61 இலட்சம் ரூபா பணப் பரிமாற்றத்திற்கு கையொப்பமிட்டு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும் சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்குத் தெரிவித்தும் தீர்வு கிடைக்காத நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றின் மூலம் குறித்த நிர்வாகிகள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...