gna
செய்திகள்இலங்கை

இலங்கையில் வஹாபிசம் துடைத்தெறிப்பட வேண்டும்! – ஞானசாரர்

Share

நியூசிலாந்தில் இலங்கையரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், இலங்கையில் வாஹாபிஸம், சலாபிசம் என்பனவை முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே ஞானசார தேரர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்லாமிய நலன்புரி அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய வெளியீடுகள் மற்றும் ஒலி, ஒளி சாதனங்கள் என்பவையும் தடைசெய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஜ் ஹிஸ்புல்லாவையும் ஏனையவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துக்கின்றபோதும், விசாரணைகள் முடிவடைந்து உண்மை கண்டறியப்படும் வரை அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...