private buses
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

வேலையின்றி தவிக்கப்போகும் பேருந்து நடத்துனர்கள்!!

Share

தனியார் பேருந்துகளில், பேருந்து நடத்துனர் இன்றி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி முதல் இம்முறையானது நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

நாட்டில் தற்போது பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் பேருந்துகளில் கிடைக்கும் பணத்தில் நடத்துனர், மற்றும் சாரதி என இருவருக்கும் ஊதியத்தினை வழங்குவது மிகவும் சிரமமாக இருப்பதால், இம்முறையினை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

இதனை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் முற்கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்தி, பேருந்துக் கட்டணங்களை செலுத்தி, சாரதிகள் இல்லாது பேருந்துகளை இயக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இதுகுறித்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...