செய்திகள்இலங்கை

corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!

Share

corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!

வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் திடீர் சுகவீனமடைந்ததை அடுத்து, அவர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆயினும் வைத்தியசாலை கொண்டுசெல்ல முன்னரே அவர் உயிரிந்துள்ளார்.

அதன்பின்னர் அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகவீனம் காரணமாக வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த 55 வயது நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் புளியங்குளம் வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்ப்பபட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

இவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...