corona vaccination 87687
செய்திகள்உலகம்

வெவ்வேறு தடுப்பூசிகள் – அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி!

Share

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரு தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டன.

குறித்த ஆய்வு அசர்பைஜான் நாட்டில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் நடாத்தப்பட்டது.

இதற்காக 100 தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

கடந்த பெப்ரவரி மாதம் இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.

முதலில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

இவ் ஆய்வில் முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டன.

ஆய்வின் 57-வது நாளில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேருக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது.

இதே போன்ற ஆய்வுகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றது.

அஸ்ட்ராஜெனகா மற்றும் பைஸர் ஆகிய இரு தடுப்பூசிகளை பயன்படுத்தி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...