202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

Share

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீன்பிடித் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான திலிபன ஜெயசூரிய மற்றும் முன்னாள் வீட்டுவசதி மற்றும் கட்டுமான பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் பணியாளரான இந்திக பண்டார விஜேசுந்தர ஆகியோரே கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துறைமுக அதிகாரசபையில் தொழிலாளர் பதவியைப் பெறுவதற்காக சந்தேக நபர்கள் ஐந்து இலட்சம் ரூபாயை கோரியதாகவும், முன்னதாக இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும், தொழில் கிடைத்ததும் 2 இலட்சம் ரூபாயை கோரியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share
தொடர்புடையது
crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...

Bogambara
இலங்கை

புதிதாக மாறும் பழைய சிறைச்சாலை – காரணம் என்ன?

மீண்டும் ஒரு சிறைச்சாலையாக பழைய போகம்பரை சிறைச்சாலையை ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விசேட வர்த்தமானி...

uni
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்.

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்...