25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

Share

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் நடந்த மொத்த திருமணங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பத்தாயிரத்து இருநூற்று தொண்ணூறு (139,290) ஆக பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு (151,356) திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஒரு லட்சத்து எழுபத்தொராயிரத்து நூற்று நாற்பது (171,140) திருமணங்கள் நடந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து அறுநூற்று இருபத்தெட்டு (162,628) திருமணப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன, மேலும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் திருமணங்களில் படிப்படியாகக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த திருமணங்களில் பெரும்பாலானவை பொதுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொருளாதாரப் பிரச்சினைகள், அதிகரித்த குடும்பப் பொறுப்புகள், உயர்கல்வி, வேலையின்மை, இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குவது, குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலையில் இருந்து போதுமான சம்பளம் இல்லாதது மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஆகியவை திருமணத்தைத் தாமதப்படுத்துவதற்கான காரணங்களாக சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...