440px Northern Line Sri Lanka December 2019 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி…!!

Share

இன்று முற்பகல் ஹட்டன் – வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர் .

இன்று (08) முற்பகல் 11.55 மணியளவில் ரொசெல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயில் கடவையை கடக்க முயன்ற போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தற்கொலையா , விபத்தா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

 

.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...