கணபதிப்பிள்ளை மகேசன்
செய்திகள்இலங்கை

யாழில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!!

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

யாழ்ப்பாணத்திலும் அண்மைக்காலமாக அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சில கிராம சேவகர் பிரிவுகளை முடக்க வேண்டிய கட்டாயத்துக்குள் யாழ்ப்பாண மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவும் , மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலர் மேலும் கூறினார்.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....