5454
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மந்திரிமனை ஜன்னல்கள் மற்றும் கம்பிகள் திருட்டு!

Share

வரலாற்று தொன்மை வாய்ந்த யாழ்ப்பாணம் – நல்லூர் – மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் ஆகியன களவாடப்பட்டுள்ளன.

மந்திரி மனையின் பின்பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை கழற்றி எடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தபடும் ஒரு கட்டிடமே மந்திரிமனையாகும்.

இந்த கட்டிடமானது போர்த்துக்கேயரால் யாழ்பாண அரசு கைப்பற்றப்படுவதற்கு முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக காணப்பட்டது.

13 நூற்றாண்டுகளுக்கு முற்பட்டஇக் கட்டிடம் செங்கட்டி, சுண்ணாம்பு, சாந்து மரங்கள், ஓடுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

1 1 1 3 1 2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....