Accident
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று காலை சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

Share

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமையில் ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.

பளைநோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்னால், துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த சிறுவன் பளை நோக்கி துவிச்சக்கர வண்டியில் குடை பிடித்து பயணித்துக்கொண்டிருந்த வேளை காற்றுக்கு குடை மடிந்தவுடன் வீதி மறைத்துள்ளது.

இதனால் முன்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...