hirunika premachandra
செய்திகள்அரசியல்இலங்கை

2023 இல் ஆட்சி கவிழும்!! – ஹிருணிகா சபதம்

Share

“2025 ஆம் ஆண்டுவரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்படும். பெண் சிங்கமாக மீண்டும் களமிறங்கியுள்ளேன். சஜித்தை ஜனாதிபதியாக்க பாடுபடுவேன்.”

இவ்வாறு சபதமெடுத்து அதிரடியாக அறிவிப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா.

கடுவலை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கடுவலை தொகுதியில் மொட்டு கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளனர். நான் ஒரு பெண்ணாக இங்கு வந்துள்ளேன். இந்த கோட்டையையும் நிச்சயம் கைப்பற்றுவோம். 2025 வரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் ஆட்சி மாற்றம் இடம்பெறும்.

எமது தலைவர் சஜித்தை ஜனாதிபதியாக்கி மக்கள் ஆட்சியை மலரச்செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ” – என்றார்.

அதேவேளை, ஜனநாயக விரோத வழியில் பயணிக்கும் இந்த அரசுக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவும் இக்கூட்டத்தில் பங்கேற்று அறைகூவல் விடுத்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...