gotta
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிக் கட்சிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்கு பங்காளிக்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இது சம்பந்தமாக ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்டன. எனினும், ஜனாதிபதி சந்திப்புக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் கொதிப்படைந்த பங்காளிக்கட்சிகள், ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் மக்கள் சந்திப்பை நாளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன. இந்நிலையிலேயே பங்காளிகளை இன்று ஜனாதிபதி அவசரமாக சந்திக்கிறார்.

இச் சந்திப்பையடுத்து மக்கள் சபைக்கூட்டத்தை பங்காளிகள் கைவிடக்கூடும் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...