imran
செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல். லில் சாதித்த அதிவேக பந்து வீச்சாளர்!

Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

இவ்வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் றோயல் சலஞ்சேர்ஸ் அணியும், ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப் போட்டியில் அதிவேக பந்து வீச்சாளராக, ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியின் 9வது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய 4வது பந்தில் இந்த சாதனை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மணிக்கு 153 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசி அவர் சாதனை படைத்துள்ள நிலையில், அவர் வீசிய பந்திற்கு ஒரு ஓட்டமே பெறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றொரு போட்டியில் தனது முதல் ஓவரில் மணிக்கு 146 கிலோ மீற்றர் வேகத்தில் உம்ரான் மாலிக் பந்து வீசியிருந்த நிலையில், ஐ.பி.எல்.லில் அதிவேக பந்து வீசியவர்களின் தர வரிசையில் 10ஆவது இடம்பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...