imran
செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல். லில் சாதித்த அதிவேக பந்து வீச்சாளர்!

Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

இவ்வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் றோயல் சலஞ்சேர்ஸ் அணியும், ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப் போட்டியில் அதிவேக பந்து வீச்சாளராக, ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியின் 9வது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய 4வது பந்தில் இந்த சாதனை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மணிக்கு 153 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசி அவர் சாதனை படைத்துள்ள நிலையில், அவர் வீசிய பந்திற்கு ஒரு ஓட்டமே பெறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றொரு போட்டியில் தனது முதல் ஓவரில் மணிக்கு 146 கிலோ மீற்றர் வேகத்தில் உம்ரான் மாலிக் பந்து வீசியிருந்த நிலையில், ஐ.பி.எல்.லில் அதிவேக பந்து வீசியவர்களின் தர வரிசையில் 10ஆவது இடம்பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...