25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

Share

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான காரணங்களையும், தீர்வுக்கான வழிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அணி இதற்கு முன் உலகக் கிண்ணங்களை வென்றதற்கு திறமையுடன் ஒழுக்கமும், முறையான தயார்படுத்தலும் காரணமாக இருந்தன என்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அணி ஒரே சீரான ஆட்டத்திறனைப் பேணத் தவறுதல், குறுகிய காலத் தீர்வுகளைத் தேடுதல், நீண்ட காலத் திட்டமிடல் இல்லாமை மற்றும் வீரர்களின் உடல், மன வலிமையை மேம்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டங்கள் இல்லாதிருத்தல் போன்ற குறைபாடுகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் அடித்தளம் பலமாக இருப்பதாகவும், பாடசாலை மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து திறமையான வீரர்கள் உருவாகி வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். “இப்போது தேவையானது முறையான தொலைநோக்குப் பார்வை, நிர்வாகத்தில் தொழில்முறை மற்றும் தலைமைத்துவத்தில் ஒரு நிலையான தன்மை ஆகும். தற்காலிக ஒட்டுவேலைகள் உதவாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வீரர்கள் தேசிய சீருடையின் மதிப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்றும், பிள்ளைகள் கொண்டாடும் வகையில் மீண்டும் ஒரு புதிய ‘மாவீரர்’ தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைத்து அதன் தரத்தை உயர்த்துவதற்கு தைரியமான முடிவுகள் தேவை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...