old man
செய்திகள்இலங்கை

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

Share

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் காணப்படும் வீட்டில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைத் தொடர்ந்து அயலவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சடலம் பொஸிசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் சில நாள்களுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். இதன் காரணமாகவே சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...

11 20
செய்திகள்உலகம்

ஈரானுக்கு எதிரான போரில் உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறைகூவல்!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்...

10 19
உலகம்செய்திகள்

சுலோவீனியாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு: வாகனங்களுக்கு 50 லீற்றர் மாத்திரமே வழங்கக் கட்டுப்பாடு!

உக்ரைன் – ரஷ்ய போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் சங்கிலி பாதிப்பு மற்றும் எல்லை...

09 19
செய்திகள்உலகம்

ஈரானில் வரலாறு காணாத இணைய முடக்கம்: 23 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள 90 மில்லியன் மக்கள்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகளின் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களைத் தொடர்ந்து,...