Muruthirruve anantha thero
செய்திகள்அரசியல்இலங்கை

வரவு செலவுத்திட்டம் ஒரு புடலங்காய் திட்டம்- சாடும் தேரர்

Share

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் யுகத்தை நோக்கி நாட்டை கொண்டு சென்றுள்ளனர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படுவதன் முன்னரே, சகலவிதமான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டம், தோல்வியான புடலங்காய் திட்டம்.

இதன்மூலம் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. 02 வருடங்கள் ஆட்சிக்கு வந்து நிறைவடைவதன் மூலமே மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளனர். மக்கள் அரசாங்கத்தில் இருப்பவர்களை கிராமங்களுக்குள் நுழையவிடாது அடித்து விரட்டும் நிலை ஏற்படும்.

மக்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன். எனக்கு பதவிகளை வழங்கி, எனது வாயை மூடி விட முடியாது” என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...