piza
செய்திகள்உலகம்

கஞ்சா பீட்சா தயாரிக்கும் தாய்லாந்து

Share

தாய்லாந்து நாட்டில் கஞ்சா செடி வளர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துப் பொதுமக்கள் இக்கஞ்சா செடியினை வரையறுக்கப்பட்ட அளவு தமது சொந்தத் தேவைகளுக்காக வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
அங்கு பாஸ்ற் பூட்களில் மிக முக்கியமான உணவாக பீட்சா காணப்படுகிறது.

இந்நிலையில் பீட்சாவுடன் கஞ்சா சேர்த்துத் தயாரித்து அதனை விற்பனை செய்வது தொடர்பில் தாய்லாந்தில் விளம்பரப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உத்தியோகபூர்வமாக பீட்சாவில் வரையறுக்கப்பட்ட அளவு கஞ்சாவை இணைப்பது குறித்து, பீட்சா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பீட்சா விற்பனை மந்தகதியில் காணப்படும் நிலையில், தாம் ஒரு விற்பனை உக்தியாக, அளவான கஞ்சாவை பீட்சாவுடன் கலப்பதற்குத் தீர்மானித்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்தளவு கஞ்சாவை நுகர்வதால், அதனை நுகர்பவர்களுக்கு தூக்கம் வரலாம் எனவும் பீட்சா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை அந்நாட்டில் கஞ்சா சட்டவிரோதமானதாக இருந்தாலும், பொதுமக்கள் சில நிபந்தனைகளுடன் குறைந்தளவு எண்ணிக்கையிலான கஞ்சா பயிரிட அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...

world 182
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15)...

world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...