வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண் திருமணமானவர் என்ற போதிலும், அவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையே நீண்டகாலமாகத் காதல் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு மற்றும் நீண்டகால மோதல் காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் வெல்லவாய, நெட்டோலகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லவாய பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். தனிப்பட்ட கோபம் காரணமாகப் பட்டப்பகலில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.