peris
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது! – அச்சுறுத்தல்களுக்கு பணியமாட்டோம் என்கிறார் பீரிஸ்

Share

“பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படாது. அது தற்போதைய யுகத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அது தொடர்பில் நாம் பல விடயங்களை செய்துவருகின்றோம்.

எமது நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் 42 வருடங்கள் பழமையானது, அதை முழுமையாக இரத்து செய்யமாட்டோம். திருத்தி அமைக்கப்படும்.

அதற்கான யோசனைகள் சபையில் முன்வைக்கப்படும். அச்சுறுத்தல்களுக்கு பணிந்து நாம் தீர்மானம் எடுப்பதில்லை.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை நாளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். அதன்போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும். சர்வதேசத்துடன் சிறந்த உறவை பேணி வருகின்றோம். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...