Parliament SL 2 1
செய்திகள்அரசியல்இலங்கை

விவாதத்துக்கு வருகிறது பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம்!

Share

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான புதிய சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே, இச்சட்டமூலம் வெகுவிரைவில் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஒரு சந்தேக நபரை தடுத்து வைக்கும் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் பாதுகாப்பாக இருக்கின்றாரா? என்பதை உறுதி செய்வதற்காக மாஜிஸ்திரேட் நீதவான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வருகை தரவும் புதிய திருத்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சட்டத்தரணி ஒருவருக்கு வருகை தரவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் தமது உறவினர்களுடன் பேசுவதற்கும் புதிய திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்களின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...