Harin Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

நாளை கொழும்பு வருவோம் – முடிந்தால் தடுத்து பாருங்கள்! – அரசுக்கு ஹரின் சவால்

Share

“இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்.”

இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

” எமது போராட்டம் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அரசுக்கு திடீரென சுகாதார நடைமுறைகள் நினைவுக்கு வந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கவே இந்த முயற்சி. நாம் தயங்கமாட்டோம். அரசுக்கு எதிரான போராட்டம் நிச்சயம் நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று நாளையுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன. எனவே, ஜனாதிபதியின் பயணம் தவறு என்பதையும் சுட்டிக்காட்டுவோம். பொலிஸில் சிறந்த அதிகாரிகள் உள்ளனர். எனவே, ஜனநாயக போராட்டத்துக்கு வழிவிடுவார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் அஞ்சமாட்டோம்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...