Harin Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

நாளை கொழும்பு வருவோம் – முடிந்தால் தடுத்து பாருங்கள்! – அரசுக்கு ஹரின் சவால்

Share

“இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்.”

இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

” எமது போராட்டம் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அரசுக்கு திடீரென சுகாதார நடைமுறைகள் நினைவுக்கு வந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கவே இந்த முயற்சி. நாம் தயங்கமாட்டோம். அரசுக்கு எதிரான போராட்டம் நிச்சயம் நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று நாளையுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன. எனவே, ஜனாதிபதியின் பயணம் தவறு என்பதையும் சுட்டிக்காட்டுவோம். பொலிஸில் சிறந்த அதிகாரிகள் உள்ளனர். எனவே, ஜனநாயக போராட்டத்துக்கு வழிவிடுவார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் அஞ்சமாட்டோம்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...