மொட்டு கை
செய்திகள்அரசியல்இலங்கை

‘மொட்டு’டன் இணைந்து போட்டியிடாதிருக்க சு.க. யோசனை!

Share

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கொழும்பில் இன்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு இந்தத் தீர்மானத்தை முன்வைத்தது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

அரசுக்கு ஆதரவாக இருந்தாலும், நாட்டில் நிலவும் உண்மையான நெருக்கடியை மக்களுக்கு எடுத்துரைப்பதில் என்ன தவறு உள்ளது எனவும் அரசிடம் பங்காளிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...