சாரதி அனுமதிப்பத்திரங்களின்
செய்திகள்இலங்கை

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

Share

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்துக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்குப் பாதுகாப்பான முறைகள் கொண்ட கணினி மென்பொருள் ஒன்றை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தோடு, தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு ஒரு வருட காலம் செல்லுபடியாகும் புதிய தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை உரிமையாளருக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலைமை சீரானதன் பின்னர் உரிய அட்டை அச்சிடப்பட்டு விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுப்பிவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...