MEIRzAC
செய்திகள்இலங்கை

மாலைதீவுக்கு மண் – சாணக்கியன் எம் .பி. ஆவேசம் !!

Share

கிழக்கு மாகாணத்தில் மணல் அகழ்ந்து மாலைதீவில் யாருக்கு வீடு கட்டுகிறீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவது கிழக்கில் மண் அகழ்வதற்கா? வரையறை இல்லாமல் மண்ணை அகழ்ந்து மாலைதீவுக்கு கொண்டுசெல்கிறீர்கள். இது என்ன அடிப்படையில் நடைபெறுகிறது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்து தெரிவிக்கையில்,

அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ் உறுப்பினர்களே, உங்களுக்கு முழுகெலும்பு இருந்தால் தோட்டக் காணிகளை வெளிநாட்டுக்கு விற்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனை தடுத்து நிறுத்தங்கள் பார்ப்போம். இல்லையேல் பதவியை தூக்கி எறியுங்கள். காணிகளை விற்பதற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கூலித் தொழிலாளர்களாக இருக்கும் எமது மக்களை இன்னும் 100 ஆண்டுகளுக்கு அடமானம் வைப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...