Photo 5 1
செய்திகள்இலங்கை

சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Share

சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள்

சதொசவில் விற்பனை செய்யப்படும் சீனியைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

சதொசவில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லசந்த அழகியவன்ன வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து இதுவரையில் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் சதொச விற்பனை நிலையங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி மாத்திரம் விற்பனை செய்யப்படுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

மக்கள் அதனை பெற்றுக்கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் நிற்பதாகவும் சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்தமையால் மக்கள் கொள்வனவுசெய்ய முடியாது வீடு திரும்ப நேரிட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...