WhatsApp Image 2021 12 10 at 1.56.08 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லூரில் இரண்டாவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவானது!!

Share

நல்லூர் செல்வா வீதிப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பு இன்று காலை வெடித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸ் உத்தியோகத்தராக கடமைபுரியும் மகன் விடுமுறையில் நேற்றிரவு வீட்டிற்கு வந்தவேளை தாயார் அவருக்கு உணவு சமைத்துவிட்டு அடுப்பினை அணைத்துவிட்டு வெளியே வந்தார்.

சிறிது நேரத்தில் சமையலறையில் பாரிய வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்று பார்த்தபோது எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறி காணப்பட்டுள்ளது. எனினும் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிப்பு சம்பவம் நல்லூர் பகுதியில் பதிவான இரண்டாவது வெடிப்பு சம்பவமாகும்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...