Johnston Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

சதொச வழக்கு! – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

Share

சதொச ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சதொச ஊழியர்கள் 153 பேரை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் புத்திக ரகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோதே மேற்கண்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2010 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தது.

2010 – 2014 காலப்பகுதியில் 153 சதொச ஊழியர்களை தேர்தல் பிரசாரம் மற்றும் ஏனைய சேவைகளுக்காக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வழக்குகளை தாக்கல் செய்த ஆணையம், அமைச்சர் பெர்னாண்டோவின் நடவடிக்கையால் 40 மில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...