siril G 1000px 8 11 21
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் நாளை வாக்குமூலம் வழங்கவுள்ள அருட்தந்தை சிறில் காமினி!

Share

அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் இன்று ஆஜராகி வாக்குமூலம்  வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை மக்களுடன் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அருட் தந்தை சிறில் காமினி உட்பட சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்  அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைக்கு  அவரை ஆஜாராகும்படி இரண்டு தடவைகள்  அழைப்பு விடுக்கப்பட்டது. இரண்டு தடவைகளும் அவர் ஆரஜாரகவில்லை.

அவர் அதற்கு கால அவகாசம் கோரிய நிலையில், இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 1 இன் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய சிறில் காமினி ஆஜாராகினார்.

மேலும், 7 மணித்தியாலயங்கள் தொடர் விசாரணையின் பின்னர் மீண்டும் நாளை சிறில் காமினி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...