Vistara Airlines2
செய்திகள்இந்தியாஇலங்கை

மீண்டும் ஆரம்பித்த விமான சேவை – தேயிலை பொதிகளுடன் வரவேற்பு

Share

கொவிட் தொற்றுநோய் காரணமாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திய பின்னர் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இன்று புதுடெல்லியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொவிட் தொற்றுக்கு பின்னர் விஸ்தாரா ஏர்லைன்ஸின் முதல் விமானம் (UK-138) (A320-NEO) புது டெல்லியில் இருந்து புறப்பட்டு 138 பயணிகளுடன் இன்று காலை 10.10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான நிலையத்தை வந்தடைந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் நீர் பீரங்கி மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.

பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்கு சிலோன் தேயிலை பரிசு பொதிகள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

மேலும்‚ விஸ்தாரா ஏர்லைன்ஸ் வாரத்திற்கு 3 விமான சேவைகளை நடத்தவுள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் கொழும்பில் இருந்து மும்பை மற்றும் புதுடெல்லி இடையே தனது தினந்தோறும் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vistara Airlines Vistara Airlines2Vistara Airlines3 Vistara Airlines4

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...