P.B. Jayasundera
செய்திகள்அரசியல்இலங்கை

பதவி விலகுகிறார் பி.பீ. ஜயசுந்தர

Share

ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, 2022 பெப்ரவரி முதலாம் திகதி முதல் நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படவுள்ளாரென அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பிபீ ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஆளுங்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ள அவர், இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்று, புதிய செயலாளரை நியமிக்கும்வரை பிபீ ஜயசுந்தர பதவியில் நீடிப்பார்.

அதன்பின்னர் அவர் நிதி அமைச்சுக்கு செல்லவுள்ளார். பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் அவருக்கு சிரேஷ்ட ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பிபீ ஜயசுந்தர, திறைசேரி செயலாளராக செயற்பட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....