money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

Share

 

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க , வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானியில், நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கான பதிவுக்கட்டணங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், முன்னர் ரூ. 4600 ஆக இருந்த ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், முன்னர் ரூ. 23,000 ஆக இருந்த அரச வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 26,400 ஆகவும், முன்னர் ரூ. 17,250 ஆக இருந்த ஒரு வரம்பற்ற நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிறுவனத்தின் பெயரை அங்கீகரிப்பதற்கான கட்டணம் ரூ. 2600 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், ரூ. 3450 ஆக இருந்த சங்கங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சங்கங்களின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான கட்டணம் ரூ. 1900 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கட்டணம் ரூ. 3900 ஆக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...