basil
செய்திகள்அரசியல்இலங்கை

மூவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுகோள்!

Share

அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்ச அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இது தொடர்பான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இவர்கள் மூவரையும் வைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதெனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளாரென அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2022 ஜனவரி முற்பகுதியில் அமைச்சரவை மற்றும் அரச நிறுவனங்களின் பிரதான பதவிகளில் மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போதே மேற்படி மூவரையும் நீக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Couple Arrested
இலங்கை

மனைவியின் கனவு – போதைப்பொருள் கடத்திய கணவன்.

மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான...

Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...