image 70e24042f0
செய்திகள்அரசியல்இலங்கை

ஞானசாரதேரரை பதவியிலிருந்து நீக்குங்கள்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.

Share

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவரை  அப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்துள்ளார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (16) விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  போராட்டங்களுக்கு ஏன் அரசாங்கம் இப்படி பயப்படுகிறது எனவும் சபையில் வினாக்களை எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் காரணங்காட்டி அரசாங்கம் போராட்டங்களை அரசாங்கம் தடுத்து வருகிறது.

நாட்டின் பெரும்பான்மை நீதிமன்றங்கள் தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்துள்ள நிலையில், அதனை மதிக்காது போராட்டங்களுக்கு வருபவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர் என்றும்
தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக  நாட்டில் இனவாதத்தையும், வெறுப்பையும் பரப்பும் பௌத்த பிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கை ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...